திங்கள், ஜனவரி 30, 2012

கண்விதுப்பழிதல்

கண்விதுப்பழிதல்: 
(Eyes consumed with Grief)


எந்த சிவப்புமில்லாத facebook போல,
வெறுமை + ஏமாற்றம் தருகிறது
நீ கண்டுகொள்ளாமல் போவது.
கால் கடுக்க காத்திருந்த
எந்தன் வலிகளை ஒன்று திரட்டி
அனுங்கும் செருப்பின் முனகல் கூடவா
உந்தன் காதுகளுக்கு எட்டவில்லை.

என்ன அலட்சியம்!
எத்தனை திமிர்!

உனைச் சொல்லி குற்றமில்லை,
நீ ஓட ஓட,
துரத்தச் சொல்லுது என் அறிவு,
முன் சில்லுகளை துரத்தும்
பேரூந்தின் பின் சில்லுகள் மாதிரி.

வெள்ளவத்தையின் அந்த வசு வண்டி தரிப்பிடம்,
எரிக்கும் வெயில்,
ஒரு தெரு நாய்,
நிழலில் சுருண்டு போயிருந்த தாடி வளர்த்த அந்த பிச்சைக்காரன்,
நான்,
நீ.

உன்னோடு உன் இரண்டு தோழிகள்.
உன்னோடு வரும் போது
அவர்கள் தெரிவதில்லை - எண்டு
தெரியுமா அவர்களுக்கு?

நான் திருக்குமரன் சேரின் இரசாயனவியல் வகுப்பின் இடைவேளையின் போது ராஜ்பவனில் பரோட்டா சாப்பிட வந்ததாய் நினைத்துக் கொண்டிருக்குறது ஊர்.
இந்த இடைவேளையில் தான் இரசாயனவியல் நடக்கிறது என்பது திருக்குமரன் சேர் கூட ஊகித்திராத உண்மை.

எனக்கும்,
உனக்கும் (?)
அந்த நாயிற்க்கும் மட்டும் - தெரிந்த காதலை
தெரியாத்தனமாய்
காலி வீதியை நிரப்பி நிற்கும்
கடல் காற்றிடம் சொல்லி வைத்தேன்.

காதலை யாரும் காற்றிடம் சொல்லாதீர்கள்.

'ஊ' என்ற பேரிரைச்சலுடன்
ஊருக்கே சொல்லிப் போனது
அந்த மூடக் காற்று.
சாப்பிடு விட்டு ஊரே தூங்கிக்கொண்டிருந்த மத்தியானம் மூன்று மணி அது.
ஒரு விடுமுறை நாள்.
காற்றில் வந்த எந்தன் காதல் கிசுகிசுவை கேட்க்க யாருமில்லை.
கேட்க்க வேண்டிய நீயே கேளாத மாதிரி நடிக்கும் போது,
யாரோடு நோக?
யார்க்கெடுத்து உரைக்க?.

சூரியன் இத்தனை பிரகாசத்தைக் கொட்டியும்,
உன் முகத்தில் இருந்து வீசுகிற ஐொலிப்பை மறைக்க முடியாத ஆற்றாமையில் வெம்மையை கொட்டித் தீர்த்தான்.

ஒரு நிமிடத்திற்கும் குறைவாக பின்னழகும்
அதற்க்கு முன் மிகச் சில நொடிகளுக்கு மட்டும் முன்னழகும்.
அவ்வளவே....... பஸ்சிலிருந்து நீ இறங்கி கடக்கும் வரை.

ஒரு நிமிடத்திற்கும் குறைவாக பின்னழகும்
அதற்க்கு முன் மிகச் சில நொடிகளுக்கு மட்டும் முன்னழகும்.
அவ்வளவே.......

இரண்டு ஸ்கூப் ஐஸ்-கிரீமும் அதன் மேல் ஒரு செர்ரிப் பழமும் போல,
தகிக்கும் அந்த வெயிலுக்கு இதமாய்.

ஏன் பெரும்பாலும் பெண்கள்
சின்னதாக ஒரு செயின்
அதில் குட்டியாக ஒரு பென்டன் அணிகிறார்கள் ?
அதைக்கூட சட்டைக்குள்ளே ஒளித்து விடுகிறார்கள்.....
சொல்லாத காதல் போல
நீண்டு நெடிகிறது செயின்
அதில் சொல்லி சேர்ந்த காதல் போல
ஜம்பமாய் ஒரு பென்டன்.
(இதுக்கு மேல இதை விவரிச்சா சென்சார்ட்)

உனக்கு ஏன் அத்தனை அவசரம்,
வகுப்புக்கு நேரமிருக்கே - கொஞ்சம் மெதுவாய்த்தான் போவேன்.
உன் கூட வருகிற அந்த குட்டச்சி தான்
எதோ குடு குடுத்துக் கொண்டே (குடு குடுப்பை)
குடு குடுத்தாள். (குடு குடு வென ஓட்டம்)

போகிற போது சும்மா போகக்கூடாது ?
எதற்கு
உந்தன் கன்னத்து முடிக்கற்றை ஒன்றை
காதுக்கு பின்னல் பத்திரப்படுத்துகிறாய்.
வெளிச்சென்று தெரிகிற காது
நெருச்சென்று எங்கேயோ தைக்கிறதே,
அந்த ஒற்றைக் கல் காதோரத்தில்
ஊஞ்சலாட வந்த என் மனது சும்மா இராதே
முன்னே கொஞ்சம் சருக்கீஸ் விளையாட விரும்புமே.
தெரிஞ்சு செய்கிறாயா ?
இல்லை
தெரியாமல் செய்கிறாயா ?

காதிலிருந்து கண் எடுத்தால்,
பிரச்சனை இன்னும் 'பூதாகரமாகுதே'.

"இடையின் பின்னழகில்
இரண்டு குடங்கள் கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்"
- (இது டீஆர்  எழுதினது நம்மட வரிகள் எண்டு டென்சன் வேணாம்)

'கூட்டி' 'ஆட்டி' என்று போடாமல் மீட்டி என்று போட்டதில் ஒரு நயமிருக்கு,
தம்புராவின் தந்திகள் இடமிருந்து வலம் மீட்கயிலே...
ஒவ்வொரு தந்தியும் ஒவ்வொரு நாதத்துடன்.....
அழுத்திய விரலிரிந்து மெலெளுமே.....
சட்டையை மடித்து மடித்து சுருக்கு தைத்திருப் பார்களே,
அந்த ஒவ்வொரு மடிப்பும் ஒரு தந்தி....
இனிமேல் இரவில் 'நேற்றைய காற்று' கேட்க்க கூடாது.
(மேலதிக விவரங்களை  உ.. ஊ.. ம ப த ப மா  பாடும் ஜேகே வைக் கேட்கவும் )

இன்னும் சில நொடிகள் தான் திரும்பி விடுவாள் - உருத்திரா மாவத்தைக்குள்.
எந்தன் பேர்சை தட்டிப் பார்த்துக் கொண்டேன்.
அதுக்குள் தான்
எழுதப்படாத காதல் கடிதம் ஒன்று
இன்னமும் இருக்கிறது.
கடிதம் எழுதத் தான் அந்த காகிதம் வாங்கினேன்.
எழுத அமரும் போதெல்லாம்
அந்த அழகான காகிதத்தில்
அவள் முகமே தெரிகிறது.
எந்தன் அறியாமையை அதில் வடித்து
அந்தக் காகிதத்தின் அழகை கெடுக்க விருப்பில்லை.

அவள் பார்த்தாளா இல்லையா ?
dts surrounding இல் எந்தன் heart beat கேட்டது....
பாவி பார்த்தாளா இல்லையா ?
அந்த ரோட்டுத் திருப்பத்தில் திரும்பும் போது
கைகள் கன்னத்து முடியை காதுக்குப் பின்னல் ஒதுக்கி
கண் பீரங்கிகளுக்கு வழிவிட.....
பார்த்தாளா இல்லையா ?
சட்டென்று கடந்து விட்டாளே....
பார்த்தாளா இல்லையா ?
உங்களுக்கு தெரியுமா ? நீங்கள் கவனித்தீர்களா ?
அவள் பார்த்தாளா இல்லையா ?

எல்லாம் தெரிந்தும் எதுவுமே தெரியாதமாதிரி மௌன சாட்சியாக இருந்தன அந்த பஸ் ஸ்டாண்டும், நாயும்.
ஊ என்று ஊளையிடும் காற்று பார்த்தாள் என்கிறதா இல்லை என்கிறதா.....

ஞாயிறு, ஜனவரி 29, 2012

அவலை நினைத்துக்கொண்டு....


இதை எழுதுவதால் ஏதும் நடந்துடும் எண்டோ, நடந்தது திரிந்திடும் எண்டோ எனக்கு நம்பிக்கை இல்லைத்தான்.... இருந்தாலும் எழுதத் தோணுது....
அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிற மாதிரி, அப்துல்கலாம், புலம் பெயர்ந்தவர்கள், ப்ளாக்கர்கள், ஏ.ஆர்.முருகதாஸ் என்று எல்லோரையும் சகட்டு மேனிக்கு இடிக்கிறது இப்ப ஒரு பேஷன், செரி என்பங்குக்கு நானும் கொஞ்சம் இடிக்கலாம் எண்டு.....
இதை படிக்க முன் இதை படிப்பது நலம், (எதையுமே படிக்காமல் பிரபுதேவா நயன் பிரிவு பற்றி புலன் விசாரிப்பது இன்னும் நலம்......)
  1. கனவு காணுங்கள் Guys: ஜேகே 
  2. அப்துல் கலாம் இலங்கை வருகையும், புலம்பெயர் தமிழர்களின் நக்கல் நய்யாண்டிகளும். :கோபிதாஸ்

கோபி சொன்ன மாதிரி அப்துல் கலாம் என்ற விஞ்ஞானி அரசியல் தீர்வு தருவார் என்றோ அல்லது தம் சார்பில் இலங்கை அரசிற்கு கண்டனம் தெரிவிப்பார் என்றோ நானும் நினைக்க வில்லை. மேலும் ஜேகே பயந்தது மாதிரி கலாமின் சாதனைகளின் மீது சேறு பூசுவதிலும் இஷ்டமில்லை.

அவர் வந்ததில் - ஒரு உலகறிந்த விஞ்ஞானி வந்தார் , radio cylon கதை மாமா மாதிரி , sun tv சிறுவர் உலகம் மாதிரி ரசனையா நிறைய சொன்னார் , கூடவே நல்லாப் படிக்கவும் சொன்னார். (நாங்களெலாம் ஒரு கதை கட்டுரை எழுதினா அதுக்கு கொமேண்டோ லைக்கோ பாத்து காத்து கிடக்கிறத விமர்சிக்கிற விடேத்திகளா; கலாம் தான் தலைப்பு பற்றி பேசமுதலே சபையிடம் நல்ல இருக்க எண்டு கேட்டதை கவனிக்க.) சந்தோசம்! பாவம் அவருக்கு இந்துக் கல்லூரிக்கும் இந்து ஆரம்ப பாடசாலைக்கும் வித்தியாசம் தெரியாமக் குழம்பிட்டார் போல.
போகிற போக்கில் அவர் மீன் பிடிக்கிறதில இருக்கிற வாய்க்கால் சண்டைய தீர்த்தது "Mind blowing". கொஞ்சம் வெள்ளன வந்திருந்தா மற்ற வாய்க்கால் சண்டைகளையும் தீர்திருப்பர் போல - Just 'u' miss 'u';

கலாம் வந்ததில சந்தோசம், வந்து தந்ததில சில ஆதங்கம் அவளவே.... அவர் தெரியாத விசயங்களில பேசாம இருந்தால் இன்னும் கொஞ்சம் சிறப்பாய் இருப்பார். அவளவே.

கோபி :யாழ்பாணத்தில் சும்மா ரோட்டில போறவன் கூட ஒரு பாடசாலை மாணவனை கண்டால், "தம்பி நல்லா படிக்க வேண்டும்" என்று தான் சொல்வான். அப்படியே!
கலாமும் சும்மா ரோட்டில போகேக்க அப்படி சொல்லி இருந்திருக்கலாம் அப்ப, மேடை வேஸ்டோ ?
நேற்றுத் தான் அந்திரட்டி முடிஞ்சது,
முந்த நாள் தான் என்ட அண்ணா தீவிலேயே A/L முதலா வந்தவர்,
எனக்கு பிரச்சனை படிக்கிறதில இல்லை,
 எல்லாரும் இங்க கலாசாரம் கெட்டிடுது,
பெடியள் கேட்டுடானுகள்,
AIDS ரேட் கூடிட்டிது,
கிளப்பும் தியட்டரும் கூடியிட்டுது எண்டு சொல்லுவினம் நம்பதேங்கோ,
ஐயந்தாம் ஆண்டு பரிசு பெறேக்கை பெடியன் என்ன சொன்னவன் எண்டு தெரியுமில்லை, படிக்கிறதில இல்லை எங்களுக்கு பிரச்சனை.
அப்புறம் ? அப்புறம் தான் எங்கட பிரச்சனை....
கோபி புலம் பெயர் தமிழர்களை வறுத்தெடுப்பது பற்றி எனக்கு இன்னொரு பார்வை உண்டு. பெரும் பாலும் புலம் பெயர்ந்தவர்கள் வெறும் dinner talk இக்குள் சுருங்குவதாக குற்றம் சாட்ட முடியாது.
பிரபு தேவா நயன் காதலை விட,
ஹன்சிகாவின் இடுப்பை விட,
திரிஷாவின் டாட்டுவை விட
இது பற்றி பேசுவது ஒன்றும் தப்பில்லை நல்ல விடயம் தானே.
பேச மட்டும்தான் சிலருக்கு முடிகிறது. அவனை அவன் குடும்ப மற்றும் சில இத்தியாதிகள் சூழ்நிலைக் கைதியாக்கி விட்டுள்ளது.
இன்றைக்கும் தான் அடுத்த சந்ததியை தமிழ் படிப்பிக்கிறார்கள், சங்கீதம் நாட்டியம் இன்ன பிற;
புட்டும் கத்தரிக்காய் குழம்பும் இத்தாலியின் இரவு போசனத்திலும் பெரும் போகமாய் கருதும் பெயர்ந்து பிறந்த குழந்தைகள் பல.
சில மாறுதல்கள் இருக்கும்.
சில அபத்தங்கள் இருக்கும்.
ஆனால் நாங்கள் மட்டும் தான் இன்னும் எங்கள் மீது ஒட்டிக்கொண்ட செம்மண் புழுதியையும், சட்டைகளில் தெறித்த இரத்தத்தையும் மேற்கின் குளிர்காலப் பனியில் கழுவ முடியாது தவிக்குறோம்.

டாக்டர் மனோ ஒரு பொத்தம் பொதுவான விமர்சனத்தை வைக்குறார் இப்படி:  "நான் முன்னர் குறிப்பிட்டதுபோல சில குப்பைகளை எழுதிவிட்டு தங்களைத் தாங்களே அரசியல் விமசகர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் என்று கூறிக்கொள்ளும் கூட்டம் ஒன்று உள்ளது. இக்கூட்டம் தமது புலொக்குகளில் வேலைவெட்டி இல்லாமல் யாரையாவது வைத்து மொட்டை அடித்துவிட்டு தமது ரசிகர் வட்டங்களிடம் இருந்து லைக், கொமென்ஸ் எதிர்பார்க்கும் கத்துக்குட்டிகள். அது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. இவர்களிடம் இருந்து சமூகத்திற்கு தேவையான ஆக்கரீதியான கருத்துக்கள் வரும் என்று எதிர்பார்க்கவுமில்லை, எதிர்பார்க்கவும் கூடாது."

பதிவுலகில் திரட்டிகளில் ஈழம் என்பது ஒரு தனி வகை என்றாக்கியிருப்பது மிக சிறிய எண்ணிக்கையிலான ஈழத்தமிழ் மற்றும் ஈழஆர்வல பதிவுலக நண்பர்களின் கவனிக்கப் படவேண்டிய வெற்றி.
இது ஒரு நல்ல நவீன ஜனநாயக கட்டமைப்பு; எந்தக் கருத்துமே மக்களால் அங்கீகாரம் பெறவேண்டி இருப்பது ஜனநாயக சட்டம். பலவிதமான கருத்துகளும் அதன் விளை கருத்துகளும் ஒத்து மறுத்து பாராட்டி சீராட்டி வளர்த்தெடுப்பது ஜனநாயக யதார்த்தம்.
ஒரு நல்ல ஜனநாயகப் பாரம்பரியத்தை எல்லோரும் சேர்ந்து கட்டி எழுப்பி இருப்பதும் அதை தொடர்ந்து தீவிரமாக கொண்டு செல்லுவதும் நகைப்புக்குரியதல்ல. நோக்கம் புகழாயிருப்பினும் எடுத்துக்கொண்ட பொருள்-சிறப்பு முக்கியம்.
இவர்களை சமூகம் செரியாகப் பயன் படுத்தின் ஆக்க ரீதியான கருத்துக்கள் வரும் (உதாரணம் யாழ் IT). 

கலைஞ்ஞர்களை செரியாகக் கவனியாத சமூகம் களை இழந்து போகும். கொமென்ட் பண்ணுவதும் லைக் பண்ணுவதும் ஒரு சமூகக் கடமை - அப்துல் கலாம் அங்கிருந்து வந்து பாலர்களுக்கு இதைதான் செய்திருந்தார். In return அவர் தான் செய்வது பிடிச்சிருக்கா எண்டு அதையே தான் எதிர் பார்க்குறார்: பசங்க படத்தில சொன்னா மாதிரி "ஒவ்வொரு ஜீவனும் ஏதோ ஒரு அங்கீகாரத்துக்கு தான் ஏங்குது". இதை கொச்சைப் படுத்துவது அழகல்ல டாக்டர். 

என்னுடைய கனவுகளில் என் ஒழுங்கையும் பக்கத்து ஒழுங்கை எல்லாம் சேர்த்தே வருகிறது. அந்தக் கனவை எழுதுகிறேன் அந்தக் கனவை நனவாக்க பகிர்கிறேன்.
நண்பர்களே!
 நிறைய நேரங்களில் நான் என்னுடைய பதிவுகளையும் சில நல்ல மற்ற பதிவுகளையும் பகிர்வது முறையே ஒரு விளம்பரம் மற்றும் கடமை.
இதில் எனக்கு எந்த வெக்கமும் இல்லை.
பலர் படித்தேன் அனால் கொமென்ட் போட: தமிழில் அச்சடிக்க தெரியாது நேரமில்லை விருப்பில்லை தோன்றவில்லை கொள்கை....... என்று ஏதேதோ சொல்கிறீர்கள்.

 "கருத்து" சுதந்திரம் மட்டுமல்ல கடமையும் கூட - ஏதாவது சொல்லுங்கள் ப்ளீஸ். அதுக்காக ஏதாவது சொல்ல வேணும் எண்டு சொல்லாதீர்கள் கலாம் மாதிரி.

"நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
 நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
 அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்"
     
           சொன்னது எங்க தாத்தா மீசை முண்டாசு.

வியாழன், ஜனவரி 26, 2012

Miss.Veluppillai – My Inspiration.




In our lives, we meet a number of teachers; those who taught us how to walk, those who taught us how to ride a bike, those who taught us why an apple falls down, those who us taught how to handle a dinner set and finally those who taught us where god is. Culturally we see our teachers as gurus. Guru’s role is different from modern-day professional teachers, while guru’s make you realize, teachers teach. And yes, most of our teachers tend to hold the role of a guru and not just a professional teacher. Though we meet variety of teachers in our life, the school teachers are special, since they are attached with our school memories. I am honored to share my experiences with one of my guru, Miss.Veluppillai.

We like our teachers, we like them for various reasons. 
We like some of them because they are smart; 
we like some of them because they are attractive;
we like some of them because they are caring, and 
we like some of them because they can teach well. 
Most of all, we like some of them because they practice what they preach. 

Some teachers got the capacity to inspire; as a result you end up admiring them. Miss.Veluppillai is someone whom I admire for all of the reasons listed above - she is smart, attractive, caring, and a good teacher who inspires by her actions. I am sure there will plenty of students to talk about Miss.Veluppillai’s commitment to her job, her teaching style, tuition policy, knowledge in chemistry, the guts to say ‘I need to refer’ when we ask silly questions, and the support extended by her for students in various extracurricular/co-curricular activities.

But I am not going to emphasize those traits of our (former) vice principal in this article. I want to bring out the qualities I learnt from her, through an indirect learning. As an active, studious kid who likes to take in charge of ‘stuffs’, I kept seeking of individuals who are successful in carrying themselves positively and effectively. I once met her at Wellawatta market while shopping with my mom, she was walking calmly but with confident, with a neatly dressed saree, nice big sun glasses and a warm smile as always. I learnt my first lesson --style--, you become stylish by the way you carry yourself not by your color and physics - ‘The look’. From that day, I always remember the bahrathi’s lyrics “Nimirntha nan nadai neer konda paarvai….” whenever I see her walking.

Once in our 12 D, A/L Math class 2001, she was teaching organic chemistry, and a curious friend of mine raised a question. I don’t remember the exact question, but I remember that it was so specific, requiring the exact temperature at which some chemicals would react (I think it was about carbon and chlorine). She did not hesitate to answer that she needs to refer books to be precise. According to syllabus all we need to know is that, this reaction will be feasible at a very high temperature. She could have bluffed to defend her ego, or replied with the popular answer “it is not necessary for you at this level” and that is what I would have done with my level of maturity. I learnt another valuable lesson – “to say I don’t know when I don't know”.

I am sure that, she must have inspired most my fellow Hindu college brothers, through her leadership in helping the school administration, the way she managed school events ranging from annual prize giving to 50th jubilee celebration. As I said before, some teachers got the capacity to inspire; as a result you end up admiring them. While some inspire by words, only very few can inspire by action. Miss.Veluppillai did inspire me and continues to do so by her action and kind words. I am blessed to be her loving student and really proud for this opportunity to share a few experience about her. Miss will be a lost to Hindu college for sure. 

Hindu College is arranging a farewell party on 10.02.12 to honor her service. If you are interested in contributing please contact Dr.Prasanna Varun (HP 2005). I can share his contact if you request.
               
R.T.Uthayasanker
H.P 2000/2001

செவ்வாய், ஜனவரி 24, 2012

புத்தனின் ஊரில் புத்தர்கள்...

கண்ணிமைக்காது அந்த ஊர்வலத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆட்டம், ஆட்டம், ஒருகால் நிலத்தூன்றி ஒரு கால் தூக்கி அரை வட்டமாக கைகள் தாங்கி சுழன்று சுழன்று ஆட்டம்...
                           டண், டண், டண் டண,ணக்கட
                           டண், டண், டண் டண,ணக்கட
                           டண், டண், டண் டண,ணக்கட
                           டண், டண், டண் டண,ணக்கட

இனிமை என்று சொல்ல முடியாவிட்டாலும் அதில் ஓர் லயம் இருந்தது. அந்த ஒலி பழகிப் போனவங்களுக்கு ஒரு துக்கம் கவ்வியது. ஊர்வலத்தின் நீளமும் நிரப்பும் பார்த்தால் அதன் காரணத்தர் ஒரு முக்கியஸ்த்தர் என்று அனுமானிக்கலாம். பச்சையும் வெள்ளயுமாக கொடி பிடித்த கனவான்கள் கூட்டம் அந்த ஊர்வலத்தை முன் வகித்தது. பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ஆட்டக்காரர், தேவாரம், திருவாசகம், குளிர்பானம், அரிசி, அம்பட்டன், மனைவி, மக்கள், அந்தப் பிணம்.

எனக்கும் அந்த இறப்புக்கும் என்ன தொடர்பு. ஒரு முறை ஆழ மூச்சு விட்டான். அரச மரத்து இலைகள் அந்த மூச்சின் வலுவிலோ, தான் பழுப்பின் மூப்பிலோ, சந்தர்பவசமாகவோ சலசலத்தன.ஒரு குருவி அங்கிருந்து சிறகடிக்க காகம் ஒன்று கிளை கொண்டது. எனக்கும் அந்த சாவுக்கும் எந்த 'நேரடித்தொடர்பும்' இல்லை எனினும் அந்த சிறுவனின் மழித்த தலை ஒரு பந்தாகி வயிற்றுக்கும் வாயுக்கும் இடையில் கிளித்தட்டு விளையாடியது.மெல்லிதாக வியர்த்தது. வியர்வையின் வாசம், நாய் மூத்திரம் இருந்து எல்லை வகுப்பதை ஞாபகப் படித்தியது. அந்த சிந்தனையின் அருவருப்பை சகியாது பிணத்தை நோக்கினேன்.

இதோ இன்று பிணம் என்று சொல்லப்படுகிற இது, இவனாக இருந்த போது என்னோடு உறவாடியவன். என்னைப் போல் அரச போகம், அதிகாரம் ஆதிக்கம், ஆரவாரம்..... இன்று அடக்கம். அடக்கம்... என்னைப் போல் ? என்னை நானே கேட்டுக்கொண்டேன். ஒரு கரையாக கோடிழுத்து உதடு சிரித்தது. நமட்டு சிரிப்பா? நக்கல் சிரிப்பா ? ஒரு வேளை ஞானச்சிரிப்பா ?

பட பட வென வெடிச்சத்தம்.

எவ்வளவு ஆரவாரம், ஆணவம், ஆர்ப்பாட்டமாக வெடிக்கிறது.
வெடித்த பின்?
...........
............
குப்பை ! மண்ணோடு மக்கல், கைப்பிடிச் சாம்பல். நானும் வெடியும் ஒன்றா ? திரும்பவும் என்னை கேட்டுக் கொண்டேன். இப்போ சிரிப்பு வரவில்லை.என்னை நான் வேடியோடு ஒப்பிட்டதில் எனக்கு என்னை பிடிக்க வில்லை. அவனை சொல்லலாம் இப்போ எரியூட்டப் படப் போகிறானே அவனை சொல்லலாம்.

பிரார்த்தனையில் இருந்த போது உலோகக் கூர் முனை நெஞ்சு பிளக்க இறந்து போனான். நானா காரணம் ? நானா தாக்கினேன் ? நானா தாக்கியவனை எவினேன் ?

ஏன் எனக்கு மீள மீள இந்தக் கேள்வி - நானா காரணம் ?

சட்டென்று அந்த மொட்டைத்தலை சிறுவன் கண் முன்னே தோன்றினான். தலை பெரிதாகி என்னை நிரப்பி இறுக்குவது போல இருந்தது பின் மறைந்து போனது.

நேற்று, அந்த அரச விழாவில் ஏதோ சொன்னார்களே.... ஆ...
"செய்பவனும் நான் செயலும் நான் அதன் பயனும் நான்" என்றான் கண்ணன்.
அப்போ நான் எப்படிக் காரணமாவேன்.
ஒரு காய்ந்து போன அரசமிலை
காற்றில் நடமாடியது,
மிதந்தது,
ஒய்யாரமாய் ஊஞ்சலாடியது,
கொஞ்சம் முன் சென்று பின் காட்டியது,
சட்டென அம்பாகி 'நோக்கி நகர்ந்தது',
வளையம் வளையமாய் சுழன்று
பின் சட்டென நிலத்தில் சரண் புகுந்தது.

அரசமிலைக்கு நிலம் சரணா? சமாதியா ?
என் கற்பனை செரியா ?
கேள்விகள்.... கேள்விகள்.....கேள்விகள்......

அரசமிலையில் இறந்தவன் முகம் தெரிந்தது. மீண்டும் தனது வாழ்க்கையையோ மனித வாழ்க்கையையோ ஒப்பிட விருப்பமில்லை - தான் ஒப்பிடப் படாதது பற்றி எந்த பிரக்ஞையும் இன்றி சருகாகிக் கொண்டிருந்தது அந்த அரசமிலை.

போதும் என்று தோன்றியது, தலை விண்ணென்றது.

ஆமாம் புத்தன் எத்தனையாவது சாவில் ஞானியானான் ?
ஞானம் தந்த சாவுக்கு முன் அவன் சாவே 'தரிசித்தது' இல்லையா ?
அல்லது அது தான் அவன் உற்றுக் கவனித்த முதல் சாவா ?
அரச மரத்திற்கும் ஞானத்திற்கும் என்ன தொடர்பிருக்கும் ?
கேள்விகள்.... கேள்விகள்.....கேள்விகள்...... 
காற்றில் பறக்கிற பட்டத்தை வால் துரத்துகிற மாதிரி
மீண்டும் மீண்டும்
கேள்விகள்.... கேள்விகள்.....கேள்விகள்...... 

அரை வயித்தியன் ஆவதற்கே ஆயிரம் பேரைக் கொல்ல வேண்டும் என்றால் ஞானியாவதர்க்கு.... எனக்கு கணக்கு அவளவா வராதே....

நான் ஞானியாக வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

ஊர்வலம் கண்ணுக்கெட்டிய வரைக்கும் தெரியவில்லை, வீதி சாதாரணமாக மிகச் சாதாரணமாக ஆகியிருந்தது - கடந்த சாவின் அடையாளம் ஏதும் தெரியவேயில்லை.

எதோ புரிந்தாற் போல் இருந்தது - எதோ புரிந்தாற் போல் சிரித்துக் கொண்டேன். அரச மரம் அச்சிரிப்பிற்க்காய் சில பழுத்த இலைகளை உதிர்த்தது.

ஒரு முக்கிய செய்தி, தலைப்பு செய்தி ஆகி, மறு பக்கம் பார்க்க, ரண்டாம் பக்கம் ஆகி முப்பதாம் நாள் நினைவு....

விழுந்த பழுத இலைக்குப்பைகளை பொறுக்கி எடுத்துப் போட்டு விட்டு மீண்டும் அண்ணாந்து மரம் பார்த்தான் அந்த வேலையாள்.

அதைப் பார்த்ததும் கண் காத்து வாய் எல்லாம் பிரிந்து திறந்து சிரித்தேன் நான்.

உளவுத்துறை அந்த வேலையாள் அன்றிரவு தான் மனைவியிடம் கேட்டதாகச் சொன்னது
"ஏண்டி அலரி மரத்துக்கு கீழ நிறைய நேரம் நிண்டா விசராக்குமே ?"


இந்த படங்களுக்கும் இந்தக்கதைக்கும் எந்த தொடர்புமில்லை...
- யாவும் கற்பனை

வெள்ளி, ஜனவரி 13, 2012

என்னை வாசிக்க முன்

இது ஏலவே இந்த blog பிறந்தநாளில்எழுதிய முன்னுரையில் தீட்டிய சித்திரம்தான் அதன் widescreen original view என் பழைய கவிதை கிறுக்கல்களில் இருந்து உங்களுக்காக தோண்டி எடுக்கப்பட்டு பதியப்படுகிறது. இது எழுதி ஏழெட்டு வருசமிருக்கும்.

ஒரு பருவப்பெண்ணை
சபைக்களைத்து வரும்
தந்தை போல,
என் கவிதைகளை
அரங்கேற்ற அழைத்து வருகிறேன்.

குறுகுறு பார்வை
எட்ட நின்று இடக்காகப் பேசல்
கிட்ட வந்து சட்டெனச் சொல்லி சிட்டெனப் பறத்தல்
அழுக்கு jeans
அரக்கை சட்டை
முள்ளு முள்ளாய் மீசை

பயத்துடன் தான் அழைத்து வருகிறேன்

மங்கிய வெள்ளி
மெல்லிய வெளிச்சம்
சூரியனோ
சந்திரனோ
யாராயிரிப்பினும்
மல்லிகைப் பந்தல் கீழ்
எட்ட ஒரு வேம்பு
கிட்ட ஒரு பலா
அமைதியாய் சலசலக்கும் ஓடை - பெண் சேலை
ஆரவாரமில்லாமல்
கவிதையாக
காதலிப்பீர்களா
என் கவிதையை ?

ஒரு பருவப்பெண்ணை
சபைக்களைத்து வரும் தந்தை போல,
என் கவிதைகளை
கைபிடித்து வருகிறேன்.

அந்த வாசனை எங்கிருந்து வருகிறது ?
சந்தனக் குச்சி ?
வாழைப்பழம் ?
பலகாரம் ?
மல்லிகைப் பூ ?
அவள் நெருக்கம் ?
உறவின் சம்மதம் ?
உற்றார் உவப்பு ?
பெற்றார் பெருமை ?
மற்றார் புகைச்சல் ?
அந்த வாசனை எங்கிருந்து வருகிறது ?

அவளின் வெட்கத்தை ரசித்தபடி
பதட்டமில்லாத நிதானத்துடன்
அனுபவிப்பீர்களா
எந்தன் கவிதையை ?
பயத்துடன் தான் அழைத்து வருகிறேன் 

தாய்க்கும் மகளுக்கும் வேண்டுமானால்
வாயும் வயிறும் வேறாயிருக்கலாம்,
எனக்கும் என் கவிதைக்கும் ஒன்றுதான்.

வாசிப்பதாலேயே நீங்கள் வாசகராகி விட முடியாது.
ஆதலால், வாசிப்பவர்களே !
ஒரு வேண்டுகோள்.
எந்தன் கவிதைகளை
யார் முன்னும் சத்தம் போட்டு படிக்காதீர்கள்.
அது பலாத்காரம் மாதிரி.

என் முன்னேயா ?
அடப்பாவிகளா...
மாமன் முன்னேயே
அவன் மகளை முத்தமிடிவீரோ ?

ஒரு பருவப்பெண்ணை
சபைக்களைத்து வரும் தந்தை போல,
என் கவிதைகளை
கைபிடித்து வருகிறேன்.
ஆதலால் காதல் செய்வீரோ ?

                                                      - இ.த

வியாழன், ஜனவரி 12, 2012

இந்து இளைஞருக்கு அறிவுரை இயம்ப வந்தனர் பெரியோர் இவ்வையகம்: காரைக்கால் அம்மையார்

இந்து வித்தியா விருத்திசபையின் 50 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சரஸ்வதி மண்டபத்தில் பிரசாந்தன் அண்ணா தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் பாடியது. கொஞ்சம் கவிதை மாதிரி இருக்கும். நண்பன் வருணுக்கு வாய்ப்பை கோர்த்ததுக்கு நன்றி.

மாமா வந்திருக்கிறார்
பிள்ளை கொஞ்சம்
baba blackship பாடு
எண்ட மாதிரி,

எனை வளர்த்த இந்துக்கல்லூரி
அதை
கண்டு செய்த
வித்தியா விருத்தி சபையே
சந்தம் கொஞ்சம் செரிய வராட்டியும்
மழலை என்று
கையை பலமா தட்டும்.
வணக்கம் பல.

அரங்கத் தலைவ,
உன் உவமைகளை கொண்டு
கவிதைகளை படைக்கும்
கடனாளிக் கவிஞ்ஞன் நான்.

எம் கவிதைகளை கூட
ஒரு உவமைகள் அடக்கிவிடும்
கவிராயர் நீர்.

இந்தக் கவிக் குபேரர்களுக்கு மத்தியில்
குசேலன் நான்,
அவல்தான் கொணர முடிந்தது.

சபையே!
தலையே!
பரந்தாமனாய் இருந்து
பராபரி.

கவிராயரே,
காகுத்தன் மேடை கருத்தரங்குகளில்
நீர் அக நானூறு விரித்த வகை கண்டு
கிறங்கி கிறங்கி காதலிப்பதாக
வீசாப் பிள்ளையாருக்கு
சத்தியம் செய்திருக்கிறேன்.
நீர் அதற்க்கு காப்பு!

புது மணப்பெண்ணாக
விரிந்திருந்த
நல்லூர் திருச்சபையிருந்து
எந்தன் வயசுக்கு வராத அறிவு
காதுவழி
முந்தி விரித்திருந்தது!

போகிற போக்கில்
எனைப் புணர்ந்த
ஆளுமைகள் பல
(நீர் உட்பட)

புந்தி உடைத்து
பந்தி வைக்கிறேன்
அவையோரே
இனி உம் முனிவு திறம்.
கௌரவரா ? பாண்டவரா?
உம் முனிவு திறம்!

புனிதவதி!
காரைக்கால் பெற்ற நங்கை.
கறைகளற்ற மங்கை. புனிதவதி!

தசைகளற்று போன தாயை
திசைகள் தெரியாத சேய்
உங்களுக்காக சந்திக்கிறது இனி.

தாயுமானவனின் தாயே!

மோனத்திருந்து கண் விழித்தாள் அம்மை
விதானத்திரிந்து கனி கொணர்ந்த பெண்மை.

பாலை வனமொன்றில் மழை அடித்தோய்ந்தது
ஏதோ ஒரு ஆபிரிக்க நாட்டில் அவசரமாக
சமாதான உடன்படிக்கை ஒப்பமிடப்பட்டது.
ஒரு போர் நின்று போனது - தொடங்காமலேயே.
இன்னொரு போர் முடிவுற்றது.
- மோனத்திருந்து கண் திறந்தாள் அம்மை.

இத்தனை அழகான ,
இத்தனை அடக்கமான ,
இத்தனை அமைதியான ,
பேயுருவை
கண்டதில்லை இதுவரை.
கேட்டதுமில்லை!

அன்புக்கு உரையே!
இந்து இளைஞ்ர்களுக்கு
இயம்பு,
அறிவுக்கு உரையே!

அம்மா சொன்னாள்,

அறிவு என்பது
அறிவதே!
உரைப்பதிலே
 இல்லை எனக்கு
உடன்பாடு.


உரைப்பதிலே இல்லை உனக்கு உடன்பாடு;
என்றால்
எதை சொல்லி நான் பாட என்பாட்டை.
தாயே

உரைப்பதிலே இல்லை உனக்கு உடன்பாடு;
என்றால்
எதை சொல்லி நான் பாட என்பாட்டை?
வேஸ்ட்டா எந்தன் விசிட் ?

அறிவு என்பது
அறிவதே!
மீண்டும்
அறிவுறித்தினாள்
அம்மை.

மெதுவாய் எட்டியது 
என் அறிவுக்கு 
அறிவு என்பது அறிவதே - கேள்விகளால்
அறிவு என்பது கேள்விகளால் அறிவதே!

தாயே,
உனக்காய் 
செய்ய இருக்கிறேன் ஒரு வேள்வி.
அவிப் பொருளாய் அதில் பல கேள்வி.
உன் வரத்துக்காய் காத்திருக்கிறேன் இந்தப்பாவி.

புரிந்ததுனக்கு என்று 
புன்னைகைத்தாள்.
புன்னகையால் அவள் சம்மதித்தாள்.

இனி 
- கேள்விகளால் ஒரு வேள்வி -

பேசா மடந்தையான 
பெருமடந்தாய்!
உன் வாழ்வில் 
நீ பேசியதாக 
யாரும் 
பேசியதில்லையே.

வாழ்க்கை என்ன 
வழக்காடு மன்றமா ?
தர்க்கங்களால் ஜெயிப்பதற்கு.

பேரம் பேசி 
பெற்றுக்கொள்ள 
உறவுகள் ஒன்றும்
கொசுருகள் அல்லவே!

பேசா மடந்தை
பேசியதிது.
பெயருக் கொண்ட பெருமாட்டி - 
இந்து சேய்களுக்காய் செப்பியதிது.
"வாழ்க்கை என்ன 
வழக்காடு மன்றமா ?".

முன்னறிவிப்பின்றி 
வேறு 
மணம் முடித்தானே - உன்னை 
மணம் முடித்தான்.
அப்போது கூடவா 
அமைதி காப்பாய்?

தாமதித்து வந்த தாயின் பதிலிது,
தயக்கமா... 
தயாரிப்பா...என்று தெரியவில்லை.
தாய் சொன்னாள்...

நான் இல்லறத்துக்குள் இருந்து கொண்டு 
இறையைத் தேடினேன்.
அவன் 
இறையோடே இருந்துகொண்டு 
இல்லறம் நாடினான்!

தத்தனுக்கு 
தத்தம் செய்தபோது கூட 
என் 
சித்தத்தில் சிவனே இருந்தான்.

என் உள்ளத்திருப்பது இறை 
என்றவன் ஒதுங்கிக் கொண்டான்.
உள்ளிருக்கும் இறை 
வெளியிருக்குமா என 
நான் தேடத் தொடங்கினேன்.

வார்த்தைக்குளே ஒரு 
வாழ்வை சொன்னாள் - அந்த 
வாழ்விருந்து 
எங்கள்
வாழ்க்கைக்கும் சொன்னாள்.

இளஞ்ஞர்களே!
உங்கள் சித்ததிருக்கட்டும்
ஒரு சிறப்பு
அது என்றும் மங்காதிருப்பது
உங்கள் பொறுப்பு

வாழ்வின் நடைமுறைகள் - உங்கள் மீது 
வழக்கு தொடுக்கும் 
உறவுகள் உணர்வுகளோடு 
பேரம் பேசும் 
சுற்றம் ஆசைகளை 
அளவெடுக்கும் 

உங்கள் சித்ததிருக்கட்டும்
ஒரு சிறப்பு
அது என்றும் மங்காதிருப்பது
உங்கள் பொறுப்பு

மாற்றங்களுக்கேற்ப மாறுங்கள் 
மயங்கத் தேவையில்லை.
ஆனால் என்றும் 
சித்தத்தில்
சிவனிருக்கட்டும்.
சிவனென்றால் ?
உயிர்களிடத்தில் அன்பாயிருப்பதே 
உத்தமனார் வேண்டுவது!

இளஞ்ஞர்களே!
இங்கே 
இல்லறத்துக்கு போன 
அக்கினிக்குஞ்சுகள்
பெரும்பாலும் 
ஈரலிப்பாகிவிடுகின்றன.

இல்லத்த்ரசியாவது,
இஞ்சினியராவது,
என்பதையும் தாண்டி 
உங்கள் 
இதயத்திருக்கட்டும் 
ஒரு நெருப்பு 
அது 
குடுக்கட்டும் எல்லா உயிர்க்கும் 
ஒரு இனிப்பு.

என்புக் கரங்கள்
தடவியது அன்போடு.
வேகத்தோடு எழுந்த என் சிந்தனைகளை 
தாபத்தோடு தணித்தது
தாயன்பு.

கனாக் காணும் காலத்தவனின் 
வினாக் காணல்
இன்னமும் முடியவில்லை !

அம்மம்மாக்கள் கூட 
அலங்கரிப்பில் ஆர்வம் காட்ட 
ஆரவாரப் படாமல் 
அலங்காரம் துறந்ததேனோ ?

நானா அலங்காரம் துறந்தேன்
ஆண்டவனுக்காக 
மாலை 
அலங்காரம் செய்தாள்
ஆண்டாள் 
ஆண்டவனை 
அலங்கரிக்க 
என்பு மாலை ஆனேன் நான் 
அன்பு மழை ஆனான் அவன்.

மகனே 
அலங்காரம் பற்றி 
அகங்காரம் இன்றி சிந்தி 
சபைக்கு போக 
நகைகளை அணியலாம் 
நகைகளை காட்ட 
சபைகளை 
கூட்டாதீர்கள் !

அகங்காரம் துறந்த
அலங்காரம்,
அலங்காரம் பற்றி 
அகம் காணும் தேவை 
சேதி சொல்லியது.

சபைக்கு போக 
நகைகளை அணியலாம் 
நகைகளை காட்ட 
சபைகளை 
கூட்டாதீர்கள் !

தாயே!
ஒரு குழப்பம்!
குற்றச்சட்டல்ல...
தத்தன் கேட்டபோது 
தடங்கல் ஏன் ?
அடியவருக்கே 
அக்கனியை 
அமுது செய்ததாக சொல்லாமல் 
மறைததேனோ ?

காதல் கணவன் 
கனி  சுவைத்த ,
சுவைத்த கனி சுவையில் 
மயங்கி நிற்கையில் 
இல்லை என்று சொன்னால் - ஏமாற்றத்தின் 
எல்லைக் குப்போவானே...

வேளை சென்று 
அழுத்தத்தில் வெம்பி 
வீடு திரும்புபவன் 
கவலை - பனி 
காலை கதிரவன் போல் 
அதை கழற்றுவது என் - பணி 
தற் கொண்டான் பேணல். 

சுவை கனி என்றவுடன் 
உனக்கதில் 
தகை பங்கு தராதது 
தப்பில்லையா தாயே ?

தகை பங்கு கேக்க 
நானென்ன பங்குதாரரா ?
- பாரியாள்.

தாயிற் சிறந்த 
தயையே,
தாயென்று சொன்ன 'தயை '
சொன்னாள் 

தகை பங்கு கேக்க 
நானென்ன பங்குதாரரா ?
- பாரியாள்.

கடுமை கொண்ட வார்த்தைகள்
தகமை கொண்ட தாயிடமிருந்து - கண்டு 
பயமை கொண்டேன்.

ஒன்று 
புரிந்தது எனக்கு - என் 
அம்மா எதற்கு 
அப்பாவுக்கென்று எடுத்து வைக்கிறார் 
என்று.

அம்மாக்கள் எல்லோருமே 
அறிவுக்கப்பால் இயங்குகிறார்கள் 
என் ஆண்மை கொண்டு அறிய 
தாய்மை ஒன்றும் 
assembly language இல்லையே.

கேள்விகளாலான 
இந்த வேள்வி முடிந்தது!
தாயே ஒரு வரம் தாரும்.

என்னகத்தும்,
என்னைப்போல் பல இளைய நெஞ்சகத்தும் 
ஒரு நெருப்பு இருக்கிறது
சிவப்பும் மஞ்சளுமாய்;
இந்த நல்லாற்றம் கரை இருந்து 
எள்ளாற்றம் கரை வரையில் 
அணையாது அந்நெருப்பு
வெந்து தனிக்கட்டும் 
முட்காடுகளை.
வெள்ளாமை செய்யட்டும் 
வரும் தலைமுறை!