புதன், அக்டோபர் 26, 2011

ஆசை முகம் மறந்து போச்சே....I


ஆசை முகம் மறந்து போச்சே.... பாரதியார்

St thomas college debate tournerment debate எண்டால் எங்களுக்கு (குறிப்பா எனக்கும் கமிலசுக்கும்) இரண்டு குறிக்கோள் தான், ஒன்று discussion ல ஜெனவிண்ட பாட்டு, மற்றது அங்கத்த கான்டீன் கொத்து ரொட்டி. St johns டின் மில்க் டீயும் ரோல்சுக்கும் அடுத்ததா st thomas கொத்தை தான் சொல்லுவன். ஒண்டில் முகுந்தன் அண்ணாவை ஐஸ் பண்ணி வாங்குவம் இல்லாட்டி மீனி, ஏலாக் கட்டத்தில கலக்சன் தான். ஆனா எனக்கு மட்டும் ஒரு hidden agenda இருந்தது. இதுவரைக்கும் யாரிடமும் சொல்லாத அந்த 'முத்து சிமிக்கி' இரகசியத்தை இங்கே பகிர்கிறேன். இது பலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு அதிர்ச்சியையும் தரலாம். எது எப்படியோ ஒரு முறை முடிவி செய்திட்டா என்ட பேச்சை நானே கேக்க மாட்டன். 

முதல் சுற்று எல்லா பள்ளிக்கூட விவாத அணிகளும் திரண்டிருந்தது. நாங்கள் பரி தோமா தமிழ் மன்ற தல ஓம்பியை கழட்டிக் கொண்டிருந்தம். எங்கள் கூட றோயல் அணித்தல கஜேந்திரன் - ஓம்பிரகாசிண்ட மச்சான், சக்தி F.M காண்டி - எப்பவும் கடி தாங்கும் இதயம்.  ஓம்பி அரக்க பரக்க எங்கட பக்கமா ஓடினா அவன கூப்பிட்டு கடிக்கிறது இல்லை எண்டா காண்டி. இந்த பரபரப்பில் வழமை போல் கஜன் இன்றைய ஸ்பெஷல் யாரெண்டு பெண் விவாத அணிகளை சீர் தூக்கி ஆராய்ந்து கொண்டிருக்கையில் (அதென்ன மாயமோ மந்திரமோ யார் செஞ்சாலும் அவன் தலையில தான் விடியிறது). என்னை யாரோ கவனிக்கிற உணர்வு ஆனா திரும்பி பார்த்தா யாரெண்டு செரியா தெரியேல்லை. நான் அவ்வப்போ கவனம் திரும்பிறதை ஜெனா தான் முதல நோட் பண்ணி சபைக்கு முன் வைச்சான். இவனுகள் வாயில விழுந்த ஒரு படமே எடுத்துடுவானுகள் அதிலையும் கமிலஸ் - கேக்கவே வேணாம் மெகா சீரியலே எடுத்திடுவான். கமிலஸ் அதை முழுசா கிண்டுறதுக்குளை ஓம்பி திரும்ப அந்தப் பக்கம் வந்து காப்பாத்தினான்.
என் முதுகில் ஊர்கின்ற கண்களை என்னால் உணர முடிகிறது. ஆனால் யாரெண்டு பார்கத்திரும்பிய போதெல்லாம் ஒரு தயக்கம், அரங்கில் இடையே நிறைந்திருந்த தலைகளும், கூட விருந்த நண்பர்களும் மேலும் தயக்கத்தை கூட்டி தடங்கலாயும் ஆனார்கள். முதன் முதலாய் நிறைய அணிகள் வந்ததிற்கு வருத்தப் பட்டேன். கடைசியா அந்தக் கண்களுக்கு சொந்தமான காதுகளை அடையாளம் கண்டு கொண்டேன். விருட்டெண்டு திரும்பியதில் ஆடிக் கொண்டிருந்தது அந்த முத்து சிமிக்கி. பெரு மூச்சும் பரபரப்பும் பின்னாலிருந்தே என்னால் அனுமானிக்க முடிந்தது. இந்த உலகத்தையே கவனியாது தோழியோடு கன நேரமாய் கதைப்பது போல நடிப்பதை அதீத கவனத்தோடு திருப்பாத தலை காட்டிக் குடுத்தது, பதட்டத்தை ஏறி இறங்கும் தோள்கள் பெரு மூச்சோடு ஆசுவாசப் படுத்த முயன்றது. காதலை களவு எண்டு சொன்னவன் பேர் தெரிஞ்சா ஒரு அருச்சனை, 108  தேங்காய், சீசீ கோயிலே கட்டலாம் எண்டு தோன்றியது.அந்த முத்து சிமிக்கி இன்னும் ஆடிக்கொண்டிருந்தது.

அவள் முன் பார்த்ததும் நான் பின் பார்த்ததும்
முன்னே வந்தென்னை காட்டச்சொன்னாள்...

நான் அபிரமிப்பட்டர் ஆகிக்கொண்டிருந்த அந்த தேவ கணத்தை ஒரு கரகர குரல் சுள்ளென நிறுத்தி நினைவுக்கு கொணர்ந்தது - ஓம்பி விவாத அணிகளை வரவேற்று போட்டி பற்றி காலகாலமாய் இருக்கும் நடை முறையை சொல்லத்தொடங்கினான். சின்னக் கண்களும் அளவான மூக்குகண்ணாடியும், அதன் மேலான பார்வையும் , உருண்ட தலையும், பருத்த கருத்த உடலும் , குழந்தை சிரிப்புமாய் அவன் பேசினால் வழமையாக ரசிக்கும் நான் அன்று அந்த மனநிலையில் இல்லை, நேரத்திற்கு ஆரம்பித்த போட்டியை சபித்தவாறே மெதுவாக நான் ஆகத் தொடங்கினேன். எடுத்த எடுப்பில் பரி பேதுரு அணியோடு போட்டி, சிக்கலான தலைப்பு எண்டதும் மீனி serious ஆயிட்டான் நாங்கள் குசி ஆயிட்டம் - வெண்டா கொத்து மீனி ஸ்பொன்சர் பண்ணும்.

பி.கு: 
  1. "அவள் முன் பார்த்ததும் நான் பின் பார்த்ததும்..." -  இதல ஒரு சிலேடை இருக்கு முடிஞ்சா கண்டுபிடியுங்கோ.
  2. இதில கற்பனை எவளவு கதை எவளவு எண்டு கேக்காதேங்கோ , கலையையும் கலைஞனையும் பிரிச்சுப் பார்க்கப் பழகவும்.
 இ.த.

1 கருத்து:

செழியன் சொன்னது…

//விருட்டெண்டு திரும்பியதில் ஆடிக் கொண்டிருந்தது அந்த முத்து சிமிக்கி. பெரு மூச்சும் பரபரப்பும் பின்னாலிருந்தே என்னால் அனுமானிக்க முடிந்தது. இந்த உலகத்தையே கவனியாது தோழியோடு கன நேரமாய் கதைப்பது போல நடிப்பதை அதீத கவனத்தோடு திருப்பாத தலை காட்டிக் குடுத்தது//

என்ன பாஸ்! கண்ணோடு கண் நோக்கியிருந்தால் இப்படி”ஆசை முகம் மறந்து போச்சே.” எண்டு புலம்பியிருக்கத் தேவையில்லை!!

கருத்துரையிடுக