செவ்வாய், ஏப்ரல் 26, 2011

கிலோ மீட்டர் களால் பிரிந்து மெகா byte களால் ஒன்றிணையும் வழி .....


Credit card bill, loans, deadlines, mortgage, rent, GE bills, tax.... எண்டு பொருளாதார குடும்ப நிர்பந்தங்கள் மற்றும் சுமைகள் துரத்தும் போது மனதுக்கும் உடலுக்கும் ஆறுதலாக இருப்பது நடப்பும் உறவும் ...

"சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இருக்கு" - வைரமுத்து 

அவ்வப்போ facebookil like pannurathum share pannurathum, comment poodurathum , msg pannurathum, chattum thaan நட்பை பாராட்ட ஒரே வழியாகிப் போனது :- சின்னச் சின்ன அன்புகள்.

எங்கள் விதி எங்கள் இருப்புகளை சிதறடிச்சு எங்களை கிலோ மீட்டர் களால் பிரித்து வச்சாலும் மெகா byte களால் ஒன்றிணைய வழி இருப்பது ஆறுதலே ....

தனிமையை அனுபவித்தவர்களுக்கு தன் அதன் கொடுமை புரியும் ...
குறிப்பாக கூடி வாழ்ந்தவர்களுக்கு அதன் வலி அதிகமே ...


நியூயார்க்  நகரம்  உறங்கும்  நேரம்  தனிமை அடர்ந்தது
பணியும்  படர்ந்தது கப்பல்  இறங்கியே  காற்றும்  கரையில்  நடந்தது
நான்கு  கண்ணாடி  சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை  தனிமையோ கொடுமை  கொடுமையோ - வைரமுத்து

வாழ்க்கை எங்களுக்கு என்றும் வண்ண மயமானதே 
ரத்தமும் சதையுமாக எங்களை சுற்றி சாவு மலிந்த போதும்
துக்கத்தையும் கொண்டாடும் வழமை எங்களது
எங்களை பிச்சு எந்த மலையில் போட்டாலும் 
கடலை தேடி ஓடும் நதிகள் நாங்கள் 
வாழ்க்கை எங்களுக்கு என்றும் வண்ண மயமானதே 

எவளவு அடித்தாலும் குனியத் தெரியாது
எங்கள் முதுகேலும்புகளுக்கு....

கூடி வாழ்வது என்பது எங்கள் வாழுவியல்
மொழி எங்களுக்கு முன்னுரிமை...

எதற்கு எடுத்தாலும் நாலு பேர் தேவை எங்களுக்கு ...
வம்பளக்க , தோசை மா நல்ல வந்தா பரிமாற,
கம்பெடுத்து பாம்படிக்க , கதை பேச,
காற்றின் சாளரங்களுக்கு பட்டம் கொண்டு சீலை செய்ய 
பொங்கல் வைக்க , பொம்மை கொண்டு விளையாட ,
சம்பல் அரைத்து , அவித்த வெண் -புட்டு தேங்காப்பூ பங்கு போட 
எதற்கு எடுத்தாலும் நாலு பேர் தேவை எங்களுக்கு ...
கூடி வாழ்வது என்பது எங்கள் வாழுவியல்

நண்பர்களே ,
உயர உயரப் பறந்தாலும் இது ஊர்க்குரருவியே ,
இதான் வால் வண்ணார்பண்ணை நோக்கியே நீளும்
கைச் சிறகுகள் கைத்தடியை நோக்கியே விரியும் ...
கொன்கிரீட் காடுகளின் உயர்ந்த மரத்தின் முப்பதாவது மாடியில்
நாளை இந்தக் குருவியை யாரும் விருந்துக்கு அழைக்கலாம் 
ஆனால் இது பனைமரக் காடுக்குள் ஒரு நாவல் மரத்தில் கூடு கட்டவே ஆசைப்படுகிறது ....
எல்லாம் இருந்தும் ஏதோ இல்லாத உணர்வு ,
எல்லாம் இல்லாத போது ஏதோ இருந்ததாக நினைவூட்டுகிறது ...
அந்த 'எதோவை' நினைவு படுத்திய இந்த ஒன்று கூடலுக்கும்
அவ்வப்போ ஆறுதல் கரம் நீட்டும் நட்ப்புக்கும் 
ஊருக்கு வந்தா ஒடியல் கூழும் கருவாட்டுப் பொரியலும் செஞ்சு தாறன்...

பெரு மூச்சுடன் ...
-இ.த.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக